ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி” சீரியலில் தற்போது நடிகர் கார்த்திக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க உள்ளதாக அந்த தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
செம்பருத்தி சீரியல்:
வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர், நடிகையர் தான் தற்போது மக்களிடத்தில் அதிகமாக புகழப்படுகின்றனர். காரணம் வெள்ளித்திரை நடிகர்கள் என்றால் எப்போதாவது தான் அவர்களை திரையில் பார்க்க முடியும். ஆனால் சின்னத்திரை நடிகர்கள் தொலைக்காட்சியின் மூலம் தினமும் மக்களை சென்று அடைகின்றனர். பல உச்சகட்ட பிரபலங்கள் கூட இதனால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொடரான “செம்பருத்தி” மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொடர் ஆகும். இந்த தொடரின் கதாநாயகனான “கார்த்திக் ராஜ்” இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை ஜீ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் வெள்ளித்திரை பிரபலமான “பிரியா ராமன்” அதிகாரம் மற்றும் செல்வாக்கு நிறைந்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவராக நடித்துள்ளார். அவரது மூத்த மகனாக கார்த்திக் ராஜ் , “ஆதி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பார்வதி கதாபாத்திரத்தில் “ஷபானா” என்பவர் நடித்துள்ளார். இந்த தொடர் ஆரம்பக்கட்டத்திலிருந்தே மக்களின் விருப்பமான தொடராகத்தான் உள்ளது. காரணம் ஆதி மற்றும் பார்வதியின் காதல் காட்சிகள் தான்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
இப்படி இருக்கும் போது கடந்த சில நாட்களாக கார்த்திக் தொடரில் இருந்து விலகப்போவதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அவை அனைத்தும் வதந்திகள் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஜீ தமிழ் நிறுவனம் கார்த்திக் ராஜை “செம்பருத்தி” தொடரில் இருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக செய்தி ஒன்றை ட்வீட் செய்துள்ளது. அந்த டீவீட்டில் கார்த்திக் ராஜின் பணிக்கு நன்றி தெரிவித்தும், அந்த “ஆதி” கதாப்பாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கோழி பண்ணையாக மாறிய பிக் பாஸ் வீடு – இந்த வார லக்ஜூரி டாஸ்க்!!
இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் இந்த கதாப்பாத்திரத்தில் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி ஷோ” பிரபலம் அஷ்வின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.