தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேவையின்றி வாகனத்தில் 144 தடை உத்தரவையும் மீறி வலம் வருபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
போலீசாரின் அறிக்கை:
தமிழக காவல்துறையினர் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் விதிகளை மீறி, தேவையில்லாமல் சாலையில் சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி விலை குறைப்பில் தங்கம் – இன்றைய விலை நிலவரம்
அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் டூ வீலரில் ஒருவரும், காரில் இருவர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |