கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 480 பேர் உயிரிழந்த நிலையில் 1,992 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே-3 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தவிட்டார்.
நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை அடுத்து பலரும் நிதி, ஊதியம் உள்ளிட்டவற்றை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகின்றனர்.
மத்திய வருவாய் துறை..!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை நேற்று அறிவித்தது.
இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 20-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய வருவாய் துறை அறிவுறுத்தியது.
ஆதரவும், எதிர்ப்பும்..!
இந்நிலையில், மாதந்தோறும் ஒரு நாள் சம்பளம் பிடிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு ஒருதரப்பு ஊழியர்கள் சம்பளம் பிடிக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த திட்டம் நிறைவேறுமா இல்லையா என்பது 20ம் தேதிக்கு பின்தான் தெரியரும்.
இந்தியாவில் கொரோனா பரவல் 40% குறைவு, குணமடைந்தவர்கள் அதிகம் – மத்திய சுகாதார அமைச்சகம்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |