தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (31,38,25) குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1267ல் இருந்து 1323 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இதுவரை 15 பேர் (1.1%) உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நல்ல தகவலாக கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 103 பேர் ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 283 பேர் (21.39%) குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 11 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேருக்கு இன்று வைரஸ் தாக்கம் உறுதி=செய்யப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |