இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். ஏப்ரல் 20ம் தேதியை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் எனவும் அதற்க்கு பிறகு சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்து இருந்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
டோல் கேட்களில் கட்டணம்:
இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு துறைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஐடி மற்றும் அதன் சம்மந்தப்பட்ட துறைகளும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
அந்த வகையில் அத்தியாவசிய பொருட்களை எளிதில் கொண்டு செல்ல நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்கள் மீண்டும் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்தி பழையபடி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |