கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி உலுக்கியது, இந்த வைரசால் உலகமே நடு நடுங்கியது அனைத்து நாடும் ஊரடங்கு மற்றும் பல விதிமுறைகளை பின்பற்றினர், இப்பொழுது கொரோனா வைரஸ் 2வது நிலையில்தான் இருக்கிறது. இப்போது நோயின் வேகம் குறைந்துள்ளது இன்னும் சில நாளில் படிப்படியாக குறைந்துவிடும்
கொரோனா வைரஸ் பாதிப்பு 40% குறைவு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
மதுபானம் ஒருபோதும் கொரோனா வைரஸிற்கு மருந்து அல்ல – உலக சுகாதார நிறுவனம் தகவல்..!
பின் கொரோனா வைரஸ் பாதிப்பு 6.2 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாக அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமூக விலகல் மற்றும் கண்டைன்மெண்ட் நடவடிக்கைகள் இதற்கு உதவி செய்துள்ளதாக கூறுகிறது மத்திய அரசு.
கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம்
அரசு கொரோனா வைரஸ் பரவலை சிறப்பான முறையில் தடுத்து வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வைரஸ் தொற்று பரவும் விகிதம் 1.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மார்ச் 15 முதல் மார்ச் 31ம் தேதி வரை இது 2.1 என்ற அளவில் இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இது 40% வீழ்ச்சியாகும்.சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி கேரளாவில் அதிகபட்சமாக 245 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தெலுங்கானாவில் 186 பேர், தமிழகத்தில் 180 பேர், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தலா 164 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில்தான் குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது. அங்கு 3% அதாவது 51 நோயாளிகள் மட்டும்தான் குணமடைந்துள்ளனர்.
ஊரடங்கு நடைமுறையிலுள்ளது ஹாட்ஸ்பாட் பகுதிகள் அடையாளம் காணப்பட்டது, கண்டைன்மெண்ட் என்று அழைக்கப்படக்கூடிய நோயாளிகள் வசிக்கக்கூடிய பிராந்தியங்கள் இனம் காணப்பட்டு அது சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள், போன்றவை, நோய் பரவல் வேகத்தை குறைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் 14 ஆயிரத்து 382 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |