தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் போதே தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுபவர்களை கைது செய்யும் போலீசார், அபராதமும் விதித்து வருகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்:
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிர் இழப்புகளும் குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய், கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு – முதல்வரின் உத்தரவுகள்
தமிழக போலீசார் வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரை தமிழகம் முழுவதும் 3,12,282 பேர் ஊரடங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 2,94,809 வழக்குகள் ஊரடங்கு விதிமீறலுக்காக பதியப்பட்டு உள்ளன. போலீசார் இதுவரை 2,65,756 வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.3,13,98,554 ரூபாய் அபராதம் வசூலித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |