தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தீப்பெட்டி தொழிலார்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு – நேரம் நீட்டிப்பு:
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அதுமட்டுமின்றி சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/shopping-2.jpg)
ஏற்கனவே மதியம் 1 வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக 2 மணிநேரம் அதாவது மாலை 3 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை வாங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் மக்கள் அதனை மீறி கூட்டமாக பொருட்களை வாங்குவது வேதனை அளிப்பதாக உள்ளது.
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிதியுதவி:
தமிழகம் முழுவதும் உள்ள 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஈ.எஸ்.ஐ(தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்) இன் கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2,177 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |