உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பதால் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
2 லட்சத்தை நெருங்கும் பலி..!
உலகளவில் இதுவரை 2,831,785 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 197,306 ஆக உள்ளது. மேலும் இதுவரை 806,953 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனா தாக்கத்தில் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகள் ரிப்போர்ட்:
அமெரிக்காவில் இதுவரை 925,232 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 52,193 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 192,994 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 25,969 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஸ்பெயினில் 219,764 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 22,524 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 82,816 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 4,632 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 154,999 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 5,760 பேர் உயிர் இழந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 159,828 பேர் பாதிக்கப்பட்டும் 22,245 பேர் உயிரிழந்து உள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 143,464 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 19,506 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |