இந்தியாவில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..? யு.ஜி.சி குழு வழங்கிய பரிந்துரை..!

0

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

எப்போது கல்லூரி திறப்பு?

இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் உட்பட அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மே 15 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது எனவும் பல மாநில முதல்வர்கள் அறிவித்து உள்ளனர். கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர் குகாத் தலைமையில் 5 நபர் குழு ஆலோசனை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் கல்லூரிகளை திறக்க 5 நபர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here