தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சூர்யா. இவரின் படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இவரின் குடும்பத்தில் அனைவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இவரின் படங்களை இனிமேல் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்த படங்கள்:
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில், 2டி நிறுவனம் தயாரிப்பில் தயாராகி உள்ள படம் சூரரைப் போற்று. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூர்யா, ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது சூர்யா – ஹரி இணையும் ஆறாவது படமாகும். அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
ஜோதிகா படம்:
2டி தயாரிப்பில் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் தயாரான ‘பொன்மகள் வந்தால்’ படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஆன்லைனில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் 2டி தயாரிப்பு நிறுவனத்தின் படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளனர். இதனால் சூரரைப் போற்று படத்திற்கு தடை ஏற்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |