தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பணிக்காலம் நீட்டிப்பு:
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிகளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அடுத்த 2 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தற்பொழுது 1,323 புது செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும், அது கிடைத்தவுடன் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |