தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் இன்று வரை 28,694 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 232 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக இன்று 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,672 ஆக அதிகரித்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா பரவி வருகிறது. அங்கு மட்டும் இன்று 1116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும் (மொத்த பாதிப்பு – 1626), திருவள்ளூரில் 64 பேருக்கும் கொரோனா (மொத்த பாதிப்பு – 1191)உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 15,462 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது.