தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!

0
tn school
34 அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூட உத்தரவு - மாநில கல்வித்துறை திடீர் முடிவு!!

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 – 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 7 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையிலும், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பயின்று வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

school

மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கலாம் என ஆசிரியர்கள் சங்கமும் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்து இன்று 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அவர்களிடம் பெறும் பரிந்துரைகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் முதல்வருக்கு அனுப்பப்படும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here