தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா பொதுமுடக்கம்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் 20 ரூபாய் மட்டுமே!!
நடப்பு கல்வியாண்டு துவங்கி 3 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பள்ளிகளுக்கான சேர்க்கை நடைபெற அரசு அனுமதி அளித்தது. இதற்காக பல விதிமுறைகளை அரசு அறிவித்தும் இருந்தது.
கல்வி கட்டணம்:
தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்றும், இதனை கண்காணிக்க தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கு அடுத்ததாக பள்ளிகள் சேர்க்கை நடைபெற்று மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று பாடங்களை கற்று வருகின்றனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
தமிழகத்தில் நிலை இப்படியாக இருக்க நாட்டில் உள்ள மற்ற மாநிலங்கள் பள்ளிகளை திறப்பதில் தீவிரமாக இருந்து வருகின்றது. அசாம் மாநிலத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது, அதே போல் கேரளா மாநிலத்திலும் அடுத்தாண்டு பள்ளி கண்டிப்பாக திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்:
இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு பற்றி கூறுகையில் “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பள்ளிகளை திறக்க தற்போது வாய்ப்புகள் குறைவாக தான் உள்ளது. அப்படி தனியார் ஆசிரியர்கள் பணிபுரியாமல் இருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்ற வாய்ப்புகள் தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.