இளைஞர்களின் கனவுக் கன்னி என்று சமந்தாவை சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவிற்கு அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அவர் இளையஞர்களை சுண்டி இழுப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தா அக்கினேனி:
கடந்த சில வருடங்களில் பல நடிகையர் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்கள். ஆனால், அதில் குறிப்பிடத்தகுந்த சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தனர். அதில் ஒருவர் என்றால் அது, சமந்தா அக்கினேனி.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயோ” படத்தில் சிம்புவுக்கு காதலியாக வந்தார். பின், இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான “யே மாயா செசவே” என்று திரிஷா நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் பின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இந்த படம் மூலமாக அவர் பல விருதுகளையும் பெற்றார். அதன் பின் தமிழில் அடுத்தடுத்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்தார்.
நடிப்பாற்றல்:
அவரது அருமையான நடிப்பு திறனால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார். பொது முடக்கத்தால் பொது அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார். அவ்வப்போது, தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!
அவரது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் இருந்தனர். தற்போது மீண்டும் தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஒரு குட்டி பனியனை மட்டுமே அணிந்துள்ளார். மரத்தின் அடியில் நிற்பது போல் உள்ளது அந்த புகைப்படம். தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.