தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் சமந்தா அக்கினேனி. தற்போது லாக்டவுன் சமயத்தில் இருந்து பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சமந்தா இது வரையிலும் ரசிகர்களை தன் வசம் கட்டிவைத்துளார் என்றே சொல்லலாம். தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தா
தமிழில் வெளியான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சமந்தா. நகை விளம்பரங்கள் பலவற்றில் நடித்திருப்பார். அதன் பிறகே அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் அவர் நடித்த மாஸ்கோவில் காவேரி அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற ‘கோரே கோரே’ பாடல் மக்களிடையே இதுவரையில் விருப்பமாக கேட்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு அவர் நடித்த படமே பானா காத்தாடி. அந்த படத்தில் அவர் நடிப்பு திறமை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதன் பின் நடித்த நானி திரைப்படம் அவரின் கேரியரையே மாற்றியது என்றே சொல்லலாம். சமந்தா என்றாலே அது நானி திரைப்படம் தான்.
அதில் அவர் இருந்த அழகுக்கும், அவர் நடித்த நடிப்பிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. அதன் பின் அவர் நடிகர் சித்தார்த் உடன் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் அவர் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். தெலுங்கிலும் அந்த படத்தின் நாயகி இவர் தான்.
நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். இந்த படத்தில் இருந்தே இவர்களுக்கு காதல் உருவானதாம். திரையுலகில் அழகிய ஜோடிகளான சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி அந்த வரிசையில் சமந்தா – நாகசைதன்யாவும் ஒரு தம்பதிகள் என்றே சொல்லலாம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் தான் இந்த அளவிற்கு திரையுலகில் நிலைத்து இருக்க என் கணவரும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார் சமந்தா. தற்போது தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார். தினசரி தனது புகைப்படங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட தவறுவதுமில்லை. அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் அமர்ந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.