ஒரே மாதத்தில் முடி வளர வேண்டுமா?? நாம் இப்பொழுது தயார் செய்யும் எண்ணெயை தினமும் பயன்படுத்தினாலே போதும் ஒரு மாதத்தில் முடி கருப்பாக, நீளமாக வளரும். இதற்கு பெரியதாக செலவு எதுவும் இருக்காது கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நீளமான முடியை பெற முடியும்.
கருமையான, நீண்ட கூந்தலை பெற:
கருவேப்பிலை, மருதாணி, வேப்பிலை, நெல்லி இலை, துளசி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி, சீத்தாப்பழ இலை, கொய்யா இலை ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் உரலில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை, சிறிய உருண்டை உருண்டையாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வெந்தயம், மிளகு, சீரகம், பச்சரிசி, கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவ கூடியவை. இயற்கையான கருமை நிறத்தை கூந்தலுக்கு கொடுக்கிறது. மேலும், கடைகளில் கிடைக்கும் விலையுயர்ந்த எண்ணைகளை காட்டிலும் நல்ல பலனை கொடுக்கும்.
எண்ணெய் காய்ச்சும் முறை:
நாம் எப்பொழுதும் செக்கில் ஆட்டிய எண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் சமஅளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். ஏனெனில், அதிக சூட்டில் காய்ச்சும் பொழுது எண்ணையில் உள்ள சத்துக்கள் போய்விடும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்க்க வேண்டும். இவையனைத்தும், எண்ணெயில் பொரிந்து சிவந்து வந்ததும், அரைத்து காயவைத்திருந்த இலை உருண்டைகளை சேர்த்தது மண் சட்டி அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒருவாரம் கழித்து தேவையான அளவு மட்டும் எடுத்து தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வந்தால் ஒரு மாதத்தில் முடி நீளமாக வளரும். நீங்களே கண்கூடாக உணரமுடியும்.