விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ்ம் ஒன்று. இந்த வாரத்தில் ஆரம்பத்திலேயே பல டாஸ்குகளை கொடுத்துள்ளது. ஆரம்ப காலத்தில் எளிதான டாஸ்க் கொடுத்தாலும் தற்போது சீரியஸான டாஸ்கையே கொடுத்துள்ளது. மேலும் நிஷா, அர்ச்சனா இடையே பல கேலியான சண்டைகளும் உருவாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை விட பல சண்டைகள் உருவாகி வருகிறது. மேலும் பெண்களிடம் தான் சண்டை வரும் என்று பார்த்தால் பாலா தான அதிகம் சண்டையிட்டு கொண்டிருக்கிறார். போதாத குறைக்கு ரியோ வேறு. மேலும் அனிதா இடையில் சற்று அமைதியாக இருந்தாலும் திரும்பவும் பழைய மாதிரியே ஆரம்பித்து விட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என பதட்டத்தில் உள்ளனர். இந்த வாரத்தில் சுசித்ராவும் நாமினேஷனில் இருப்பதால் அவர் தான் அனேகமாக வெளியேற போவது என தோன்றுகிறது.
மேலும் பலரும் அதை தான் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று எபிசோடில் பிக் பாஸ் வேறு நாமினேட் செய்த காரணத்தை கூற பாலா கொதித்து எழுந்து விட்டார் என்றே சொல்லலாம். ஷிவானியிடம் எனக்கு உன் மேல லவ் வந்தா சொல்றேன் என்று வீராப்பாக பேசிவிட்டு சென்றார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதான் 40 நாளை கடந்து விட்டார்களே என்று கடினமான ஒன்றை கொடுத்துள்ளார். வீட்டில் தேவையான அனைத்திற்கும் டாஸ்க் செய்து முடித்தால் மட்டுமே கிடைக்கும்.
இதனால் தண்ணீர் குடத்தை தூக்குவதும், டீ விற்பதும் என பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் தண்ணீருக்கு அர்ச்சனா நிஷா குழாயடி சண்டை போல முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுகின்றனர். இவ்வாறு ப்ரோமோ வெளியாகியுள்ளது.