முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிறுவயதில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்ததாக அவர் புத்தகத்தை வெளியிடும்போது கூறினார்.
பாரக் ஒபாமா
பராக் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக இருந்தவர். இவர் இந்தோனேசியாவில் சிறு குழந்தையாக இருந்தபோது இந்து புராணக்கதைகளான ராமாயணம் மற்றும் மகாபாரதம் கேட்டு வளர்ந்தாக கூறினார். 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொண்ட அவர் அதற்கு முன்பு ஒரு தடவை கூட இந்தியாவை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவுக்கு அவர் மனதில் ஒரு சிறப்பு இடம் இருப்பதாக கூறியுள்ளார். கல்லூரியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நண்பர்களுடன் பழகியதால் அவர்களிடம் தால் மற்றும் கீமா சமைப்பதை கற்றுக் கொண்டேன் மற்றும் பாலிவுட் திரைப்படங்களையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
புத்தகம் வெளியீடு
பராக் ஒபாமா “எ ப்ராமிஸ்ட் லேண்ட்” என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அப்பொழுது தான் அவர் சிறுவயதில் இந்து புராணக்கதையைக் கேட்டு வளர்ந்ததை பற்றி கூறினார். அவர் அந்த புத்தகத்தில் இந்தியாவில் மிகப்பெரிய பரப்பளவில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் வாழ்கின்றனர். அதில் 2000 தனி இன குழுக்கள் வாழும் இந்தியாவில் 700 மொழிகள் பேசப்படுகின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஒபாமா அப்புத்தகத்தில் நினைவுக்குறிப்புகளாக 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரம் முதல் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை கொன்ற ரெய்டு வரை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுதும் இந்த புத்தகத்தின் முதல் பாகம் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.