Sunday, May 5, 2024

சுஷாந்த்யை மிரட்டிய சல்மான் கான் – அடுத்த பகீர் திருப்பம் ..!

Must Read

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அடுத்த திருப்பமாக சல்மான் கான் சுஷாந்த்தை மிரட்டி உள்ளார் என்பது மேலும் சுஷாந்த்தை மற்ற பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்ய தடுத்து உள்ளதாக சல்மான் கான் பற்றி பகிர் தகவல் வெளியாகி உள்ளது.

சுஷாந்த் மரணம்:

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஆன நடிகர் சுஷாந்த் சிங்க் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர், கடந்த சில வருடங்களில் சிறந்த நடிகர் ஆக வலம் வந்தவர். பல திறமைகள் படித்த இவர் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Sushanth singh rajput
Sushanth singh rajput

அவர், அதிக மனஉளைச்சலுக்கு ஆளானது தான் இதற்கு காரணம் என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் பாலிவுட் இல் உள்ள சில நடிகர்களால் தான் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளனர், என்று நடிகர்கள் ஆன ஷாருக் கான், ஷாஹித் கபூர் அலியா பட் மற்றும் மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மோதல்:

இதனிடையே சல்மானுக்கு இந்த விஷயத்தில் தொடர்பு உள்ளது. சல்மான் சுஷாந்த்தை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு வைத்து இருந்துஇருக்கிறார். இப்படியான நிலையில் சுஷாந்த் ஒரு நைட் பார்ட்டிக்கு சென்று உள்ளார். அங்கு ஆதித்ய பன்சாலியின் மகனும் நடிகரும் ஆன சுராஜ் பன்சாலி வந்து உள்ளார். சுராஜுக்கும் சுஷாந்த்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

sushanth-suraj pancholi
sushanth-suraj pancholi

இது மோதலில் முடிந்து உள்ளது. இதனால் கோபமடைந்த சுராஜ் தன் குருவான சல்மான்யிடம் போகர் தெரிவித்து உள்ளார். சல்மான் சுஷாந்த்துடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

Salman Khan-suraj Pancholi
Salman Khan-suraj Pancholi

அப்போது சுஷாந்த் தன் தரப்பு நியாயத்தை எடுத்து கூறியுள்ளார். சல்மான் யிடம் பேசுவோர் அவரிடம் கொஞ்சம் பணிவாக தான் பேசுவர்களாம், அது தான் அவருக்கும் பிடிக்குமாம், ஆனால் சுஷாந்த் தன் தரப்பு வாதத்தை கூறியது சல்மானுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர் சுஷாந்த்தை மிரட்டியும் உள்ளார்.

sushanth-salman
sushanth-salman

மேலும், சல்மான் தன் படத்தில் சுஷாந்த்தை நடிக்க வைக்கும் திட்டத்தை கைவிட்டு உள்ளார். அதுமட்டும் அல்லாமல் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்களிடம் சுஷாந்த்தை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தால் சுஷாந்த் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -