இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதலை அடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க மக்கள் குரல் குடுத்து வருகின்றனர். இதனை அடுத்து சில செல் போன் கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியா-சீனா
இந்தியா – சீனா இடையே கடந்த 1 மாதத்திற்கு மேலாக பிரச்சனை நடந்து வந்த நிலையில் எல்லையில் ஏற்பட்ட தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சீன பொருட்களை புறக்கணித்து வருகின்றனர். மேலும் செல் சந்தையில் சீன போட்டியினால் தான் இழந்து விட்ட பங்கை மீண்டும் பெற சாம்சங், ஆப்பிள், நோக்கியா, அசுஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
செல்போன்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் ஏ வரிசையிலும் எம் வரிசையின் அறிமுகத்தை மூலம் சாம்சங் நிறுவனத்தின் செல் போன்கள் அதிகளவு குவிந்தன. மேலும் இந்த விற்பனையால் சாம்சங் மூன்றாவது இடத்தை பிடித்தது. மேலும் இந்த சாம்சங் கம்பெனி தன்னுடைய புகழ்பெற்ற கேலக்சி நோட் 10 லைட் செல் போன்னை 4 ஆயிரம் வரை குறைத்து. மேலும் தனது கேலக்சி எம் 11, எம்01- ரூ 15 குறைவான விலையில் வெளியிட்டது.
மேலும் செல் போன் சந்தையில் பெரும்பங்கை வகிக்கும் சியோமி, அனைத்து நிறுவனத்தையும் விட தங்கள் தான் இந்தியமயமாக இருக்கிறோம் குறிப்பிடுகிறது. மேலும் சியோமி ஆராய்ச்சி மையம் இந்தியாவில் தான் உள்ளது. இதில் 500000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதனை தொடர்ந்து இதன் தலைமை குழுவினர்களும் இந்தியாவை சேர்ந்தவர்களே. மேலும் இந்தியாவில் தான் வரியும் காட்டுகின்றனர்.