ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கூடுதலாக, இந்த மருந்து ரஷ்யா நாட்டின் அதிபர் மகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
முதல் தடுப்பு மருந்து:
கடந்த சில நாட்களாக எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆர்வம் கட்டி வந்தது. அதில் ரஷ்யா நாடு தொடரந்து முன்னணியில் இருந்து வந்தது. உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. அதனை, இன்று அறிமுகபடுத்த இருந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இன்று காலை அந்த மருந்தை, அந்நாட்டின் அதிபர் புடின் மக்களுக்கு அறிமுகபடுத்தினர். இன்று காலை காணொளி வாயிலாக மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து விட்டு இந்த மருந்தை அறிமுகபடுத்தினர்.
என் மகளுக்கு தடுப்பு மருந்து:
அவர் பேசுகையில், “இது உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஆகும். இதனை எனது மகளுக்கும் கொடுத்துள்ளனர். இது கண்டிப்பாக செயல்புரியும் என்று நம்புகிறேன். எனது மகளும் இந்த சோதனையில் பங்கேற்று உள்ளார். இதனை அடுத்த கட்டமாக மக்களுக்கு வழங்க விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக அடுத்த சில வாரங்களுக்குள் அதிக அளவில் தயாரிக்க ரஷ்யா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.