சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தொடர்ந்து பல நம்ப முடியாத மர்மங்கள் வெளியாகி வருகிறது. ரக்சன் சித்ராவை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதை பற்றி ரக்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரக்சன் மிரட்டியதாக புகார்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. தனது விடா முயற்சியால் இந்த அளவிற்கு புகழை தொட்ட சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சித்துவுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவருக்காக தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே பார்க்க ஆரம்பித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவரின் தற்கொலைக்கு யார் காரணம் என விசாரித்த போது தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. ஹேமந்த் சரியான பொறுக்கி என்றும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சித்ராவின் தோழி கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போதும் விஜய் டிவி பிரபலமான ரக்சனும், சித்ராவும் காதலித்து வந்ததாகவும் இருவரும் தனியாக ரெசார்ட்டில் இருந்ததை ரக்சன் வீடியோ எடுத்ததாகவும் அதனை வைத்து மிரட்டியதாகவும் சித்ராவின் தோழி கூறியிருந்தார்.
வெளியிடப்பட்ட வீடியோ
இதனை கேட்ட பலரும் ரக்சன் மீது கோவத்தில் இருந்தனர். தற்போது ரக்சன் இதனை பற்றி வாய் திறந்துள்ளார். அதாவது சித்ராவும் அவரும் நண்பர்கள் மட்டும் தான். அதுவும் செட்டில் ஒன்றாக இருக்கும்போது பேசி பழகியது தான். அதனை தாண்டி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இப்படி பொய்யான வதந்தியை இனிமேல் பரப்பாதீர்கள்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!
இதனால் என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிடும். சித்ராவை நான் மிரட்டுனேனு சொல்றதெல்லாம் சுத்த பொய். இது விஷயமா நான் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கணும்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.