சிவகாமி வைத்த முதல் பரீட்சையிலேயே தோற்றுப்போகும் சந்தியா – விறுவிறுப்பாகும் ‘ராஜா ராணி 2’!!

0

சந்தியாவை காய் வாங்கி வர சொல்லி மார்கெட்டிற்கு அனுப்புகிறார் சிவகாமி. மார்க்கெட் சென்று விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபரீதத்தினால் கிழிந்த பையுடன் வீட்டுக்கு வரும் சந்தியாவை கடுமையாக திட்டுகிறார் சிவகாமி.

‘ராஜா ராணி 2’ தொடர்

இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் சரவணன் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது கையில் மருதாணி வைத்துக்கொண்டிருக்கிறார் சந்தியா. பின்பு மருதாணி பற்றிய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுகிறார்கள் சரவணனும், சந்தியாவும். சந்தியாவுக்காக வாங்கி வந்த ஸ்பெஷல் அசோகா அல்வாவை சரவணன் ஊட்டி விட பின்னாலேயே பாடல் ஒலிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவளோ நல்லவரா இருக்கும் சரவணன் கிட்ட நம்ம ஐபிஎஸ் கனவை சொல்லிட வேண்டியது தான் என மனத்துக்குள் நினைத்துக்கொள்கிறார். காலையில் வீட்டுக்கு போஸ்ட் மேன் வந்து பார்வதிக்கு அவள் கல்லூரியிலிருந்து வந்த மார்க் ஷுட்டை சந்தியாவிடம் கொடுக்கிறார்.

பார்வதி அவள் மார்க் ஷீட்டை மறைத்து அது மார்க் ஷீட் இல்லை என சிவகாமியிடம் பொய் சொல்லுகிறாள். அப்போது சிவகாமி சந்தியாவை மார்க்கெட் போக சொல்லி பணம் கொடுத்து அனுப்புகிறார். சந்தியா அங்கிருந்து கிளம்பியதும் அர்ச்சனாவை அழைத்த சிவகாமி துணிகளை எல்லாம் துவைக்க சொல்லி அனுப்பி வைக்கிறார்.

#INDvsENG 4வது டெஸ்ட் உணவு இடைவேளை – 4 விக்கெட்டை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

மார்க்கெட்டுக்கு கிளம்பும் சந்தியாவிடம், நான் என்னென்ன காய்கறியெல்லாம் வாங்க சொன்னேன் என்பதை திருப்பி சொல்லு என சிவகாமி கேட்க மனப்பாடமாக ஒப்புவிக்கிறார் சந்தியா. கடையில் உற்சாகமாக சமைத்து கொண்டிருக்கும் சரவணனிடம் வரும் சந்தியா, சிவகாமி காய் வாங்க சொல்லி அனுப்பியதை கூறுகிறார்.

அப்போது அங்கு வரும் பூக்கார அம்மா சரவணனை பூ வாங்க சொல்லி வற்புறுத்த, பூவை வாங்கி சந்தியாவின் தலையில் வைத்து விடுகிறார் சரவணன். மார்க்கெட் வரும் சந்தியா, ஒவ்வொரு கடையாக சென்று விசாரித்து காய்களை வாங்குகிறார். குறைந்த விலையில் காய்களை வாங்கிக்கொண்டு சந்தோசமாக திரும்புகிறார் சந்தியா.

அப்போது சாலையில் வரும் சிறுவனை, வண்டி மோதிவிடுவது போல வருகையில், அவனை காப்பாற்றிய சந்தியா, காய்கறி பையை ரோட்டில் போட்டுவிட வண்டி அதில் மீது ஏறிவிடுகிறது. கிழிந்த பையுடன் வீட்டுக்கு வரும் சந்தியாவை, நான் வைத்த முதல் பரீட்சையிலேயே நீ தோத்துட்ட என கடுமையாக திட்டுகிறார் சிவகாமி. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here