இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது நான்காவது டெஸ்ட் போட்டியை அஹமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி தற்போது தனது நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் செயல்பாடு பேசும் அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டியில் அனைத்து பேஸ்ட்மேன்களும் இந்திய பௌலர்களிடம் சிக்கினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின்!!
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 55 ரன்கள் அடித்து ஆறுதல் கொடுத்தார். முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அக்சர் 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்பு தனது முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இவரை தொடர்ந்து புஜாரா 17, கோஹ்லி 0, ரஹானே 39, ரோஹித் 49, அஸ்வின் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பாண்ட் சதம் அடித்து ஆட்டமிழந்தார். தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது களத்தில் அக்சர் மற்றும் சுந்தர் விளையாடி வருகின்றனர்.
லைவ் ஸ்கோர்:
இந்தியா – 294/7
அக்சர் – 11* சுந்தர் – 60*