தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுக கட்சி நேர்காணல் தேதி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அமமுக கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் வைத்து அவர்களை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தற்போது காலம் மிக குறைவாக இருப்பதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வரிசையில் அமமுக கட்சி தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 3ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று தெரிவித்தது. மேலும் இதற்காக வருகிற 7ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வரை சுமார் 1,700 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களின் பட்டியல் – மார்ச் 10இல் வெளியீடு!!

தற்போது அமமுக கட்சி சார்பாக போட்டியிடப்போகும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நேர்காணலை நடத்தவுள்ளனர். இந்த நேர்காணல் வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here