காலையில் நடிகர் ரஜினிகாந்த தனது கட்சி குறித்து அறிவித்ததில் இருந்து பல தரப்பினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வருகின்றன. அவர்களில் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளார்.
அரசியல் களம்:
தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டு தான் கட்சி துவங்கி போட்டியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல வருடங்களாக அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் உட்பட அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்று கட்சி குறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதால், பலரும் பல விதமான காரசாரமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. அவர்களில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் அவரை வாழ்த்தி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
‘தமிழக மக்களுக்காக எனது உயிர் போனாலும் மகிழ்ச்சி தான்’ – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!!
அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “இந்த செய்தியினை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி. இந்த செய்தியினை கேட்பதற்காக காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் லட்சியம் நிறைவேற நான் ராகவேந்திரா சாமியிடம் பிராத்தனை செய்கிறேன். இந்த கொரோனா காலத்தில் உங்கள் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளீர்கள். உங்கள் கனவு நிறைவேறும்” இவ்வாறாக பதிவிட்டுள்ளார்.