ஆய்வகத்தில் உருவான செயற்கை ஆடு, கோழி இறைச்சி விற்பனை – சிங்கப்பூர் அரசு அனுமதி!!

0

உலகம் முழுவதும் 80-90% மக்கள் அசைவ பிரியர்களாக உள்ளனர். ஆகையால் தினமும் பல கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இதனால் சிங்கப்பூர் அரசு கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களில் இறைச்சிகளை தயார் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விலங்குகளின் உடல் திசுவை பயன்படுத்தி ஆய்வகத்தில் இது உற்பத்தி செய்யப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கான செலவு அதிகமாகும். உலகில் ஆய்வக இறைச்சி தயாரித்து விற்பனை செய்வது இதுவே முதன்முறையாகும். அமெரிக்க நிறுவனமான “ஈஸ்ட் ஜஸ்ட்”என்ற நிறுவனம் இந்த ஆய்வக இறைச்சிகளை விற்க சிங்கப்பூர் அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது.

அசத்தலான ‘ஆம்லேட் கறி’ ரெசிபி!!

இது தொடர்பாக “ஈஸ்ட் ஜஸ்ட்” நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோஸ் டெட்ரிக் கூறுகையில், ‘ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சிகள் நேரடியாக விலங்குகளின் திசுக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் உயர்தர மனித பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாகவும் உள்ளது, இந்த இறைச்சி துண்டுகளாக அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதன் விலை 50 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3690) ஆக உள்ளது. இந்த இறைச்சி விற்பனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்’ இவ்வாறாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here