‘தமிழக மக்களுக்காக எனது உயிர் போனாலும் மகிழ்ச்சி தான்’ – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!!

0

நடிகர் ரஜினிகாந்த் இன்று பிற்பகல் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி துவக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதனை ட்விட்டரில் உறுதி செய்துள்ள அவர் தற்போது அது குறித்து நிருபர்களுக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

தமிழக அரசியலில் மாற்றம்:

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பல எதிர்பார்ப்புகளை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் நடிகர்கள் போட்டியிட உள்ளனர். திரையுலகில் சக போட்டியாளர்களாக உள்ள கமல் மற்றும் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதனால் தேர்தல் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Kamal Hassan & Rajnikanth
Kamal Hassan & Rajnikanth

இன்று தான் புதிய கட்சி துவங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து தற்போது நிருபர்களுக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக மக்களுக்காக எனது உயிர் போனாலும் மகிழ்ச்சி தான். ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பேன் என்று நான் கொடுத்த வாக்கை மாற்ற மாட்டேன். நான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் அது தமிழக மக்களை தான் சேரும்”

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடாது??

actor rajinikanth latest
actor rajinikanth

“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாலும், எனது உடல் நலனில் சில பாதிப்புகள் இருக்கும் காரணத்தாலும் மருத்துவர்கள் என்னை சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது”

ரஜினிகாந்த் இந்த பேட்டியின் போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தமிழருவி மணியனை அறிமுகப்படுத்தி உள்ளார். அதே போல் மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தியை குறிப்பிட்டுள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here