‘நான் எந்த நடிகருடனும், நெருக்கம் காட்டி நடித்ததே கிடையாது’ – சமந்தா ஓபன் டாக்!!

0

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அக்கினேனி மாலத்தீவுக்கு சென்று வெளியிட்ட புகைப்படங்கள் யாவும் சர்ச்சையை கிளப்பியது என்றே சொல்லலாம். தற்போது அது குறித்து சமந்தா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சமந்தா அக்கினேனி:

திரையுலகை பொறுத்தவரை எப்பொழுதுமே நடிகைகளுக்கு குறிப்பிட்ட காலகட்டம் வரை தான் படவாய்ப்புகள் இருக்கும். இதனாலேயே நடிகைகள் மார்க்கெட் இருக்கும்வரை நடித்து விட்டு 30 வயதிற்கு பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொள்வர். மேலும் சில காலத்திற்கு பிறகு கூட நடித்த நடிகர்களுக்கே அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்கும் நிலை ஏற்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி இல்லை. ஆரம்பத்தில் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வந்த சமந்தா தற்போது வரை முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

2017 இல் சமந்தாவிற்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது வரை அவருக்கு மார்க்கெட் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதுமே துறுதுறுவென சிரித்துக்கொண்டே இருக்கும் சமந்தாவை மக்களுக்கு அவ்வளவு பிடித்துப்போனது. இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார் சமந்தா.

உச்சகட்ட கவர்ச்சியில் இடுப்பழகை காட்டிய அனிகா சுரேந்தர்!!

உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோ என பல கவர்ச்சி ததும்ப பலவற்றை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் மாலத்தீவுக்கு கணவரின் பிறந்தநாளுக்கு சென்றிருந்த சமந்தா பிகினி புகைப்படங்களை வெளியிட்டதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் இதுவரையிலும் தான் எந்த நடிகருடனும் நெருக்கமான காட்சிகளில் நடித்தது இல்லை, மேலும் மாலத்தீவில் நான் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டேன் என்பது சுத்த பொய் என்றும் கூறியுள்ளார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here