Wednesday, May 8, 2024

தமிழகத்தில் ஜூன் மாதம் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்?? வெளியான முக்கிய தகவல்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக உயர்கல்வி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதத்திற்கு பிறகே நடைபெறும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகள் மூடல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் பல வித தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கல்வியாண்டு துவங்கி 5 மாதங்கள் ஆன நிலையில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அண்டை மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் அச்சம் காரணமாக முடிவினை ஒத்தி வைத்து வருகின்றது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் தேர்வுகளையும் எழுதி வருகின்றனர். அதிலும் பொதுத்தேர்வுகளை எழுத காத்திருக்கும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்னும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்கள் தான் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற நுழைவு தேர்வுகளுக்கு அடிப்படை என்ற காரணத்தால் தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கவனமாக முடிவுகளை எடுத்து வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் தேர்வுகள் நடைபெறும் என்று தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -