195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதற்கு தமிழகம் முழுவதும் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மீண்டும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ சூட் – ரசிகர்கள் உற்சாகம்!!

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அப்பல்லோ மற்றும் எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனைகள் உட்பட சென்னையில் மட்டும் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. தொடர்ந்து திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின் படி தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here