பிக்பாஸ் நாயகியான ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு வீட்டின் மொட்டை மாடியில் வைத்து போட்டோ சூட் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன்
தமிழ் திரையுலகிற்கு ‘ஜோக்கர்‘ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் இவர். விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி‘ என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரம்யா பாண்டியன். தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு சிங்கப்பெண் என்ற பட்டத்தோடு இறுதி சுற்று வரை நின்று விளையாடினார்.
ஹேமா,கண்ணம்மா இடையே இருக்கும் பழக்கத்தை தெரிந்துகொள்ளும் வெண்பா – அனல் பறக்கும் கதைக்களம்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
விஜய் டிவி ஷோவில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து போட்டோ சூட் ஒன்றை நடத்தினார். பச்சை நிற சேலையில் இடுப்பு தெரியும் வண்ணம் இவர் பதிவிட்ட புகைப்படம் படு வைரலாகி போனது.
தற்போது பிக்பாஸ் முடித்து வீடு திரும்பியுள்ள ரம்யா பாண்டியன் மீண்டும் மொட்டை மாடியில் வைத்து போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.