ஹேமா,கண்ணம்மா இடையே இருக்கும் பழக்கத்தை தெரிந்துகொள்ளும் வெண்பா – அனல் பறக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் வருகிறது. இன்றைய ஹேமா பள்ளி விடுமுறை தினத்தில் கண்ணம்மவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சௌந்தர்யாவிடம் கெஞ்சுகிறார்.

பாரதி கண்ணம்மா

பல எதிர்பாராத திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெண்பாவிற்கு லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை தான் என்று தெரிந்ததும் குழப்பமடைகிறார். என்ன நடந்து இருக்கும் என்று குழப்பமடைகிறார்.

அதன் பின் கண்ணம்மாவின் வீட்டிற்கு தைக்க கொடுத்த டிரஸை வாங்க வருகிறார். காலில் அடிபட்டிருப்பதை பார்த்து கண்ணம்மா பதற விழுந்துவிட்டதாக பொய் சொல்லுகிறார். அதன் பின் சௌந்தர்யாவும் வேணுவும் பேசிகொண்டுள்ளனர். ஸ்கூலில் நடந்த விழாவை பற்றி வேணு கேட்க தான் போன் பேச சென்று விட்டதாக சொல்லுகிறார்.

அடுத்து ஹேமா வந்து தனக்கு 4 நாட்கள் லீவு என்றும் தன்னால் சமையல் ஆண்ட்டியை பார்க்க முடியாது என்றும் வருத்தப்படுகிறார். இதனை கேட்ட சௌந்தர்யாவிற்கு கோவம் வருகிறது. எப்போ பார்த்தாலும் அந்த சமையல் ஆண்ட்டி தானா?? என்று கூறி திட்டுகிறார்.

மேலும் கண்ணம்மவிடம் அட்ரஸ் வாங்கிக்கொண்டு வந்ததை சொல்லுகிறார். இதனால் எரிச்சலடையும் சௌந்தர்யா அதனை தூக்கி எறிகிறார். அது நேராக வெண்பாவின் காலடியில் விழுகிறது. பிரித்து பார்க்கும் வெண்பா அது கண்ணம்மாவின் அட்ரஸ் என்று கண்டுபிடிக்கிறார்.

ஹேமாவிற்கும் கண்ணம்மாவிற்கும் எப்படி பழக்கம் என்று புலம்பி தவிக்கிறார் வெண்பா. வெண்பாவின் கணக்குப்படி கண்ணம்மாவின் குழந்தை ஹேமா தான் சௌந்தர்யா குழந்தையை மாற்றி வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். அடுத்ததாக கண்ணம்மாவும் வீட்டில் பணத்தை காணாமல் தேடுகிறார். அப்பொழுது பாரதியும் கண்ணம்மாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்கிறது.

அதனை பார்த்து தனது வாழ்க்கையை யோசித்துக்கொண்டுள்ளார். அப்பொழுது பார்த்து லட்சுமி உள்ளே வர கையில் இருப்பதை காட்ட சொல்லுகிறார். எப்படியோ கண்ணம்மா கையில் இருப்பதை மறைத்து லட்சுமியிடம் தப்பித்து விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here