#INDvsENG டெஸ்ட் தொடர் – பயிற்சியை துவங்கிய இந்திய வீரர்கள்!!

0

வரும் 5ம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இரு அணி வீரர்களும் சென்னை வந்தனர். தற்போது தனிமைப்படுத்துதலின் காலம் முடிவடைந்ததால் தங்களது பயிற்சியை வீரர்கள் துவக்கியுள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னை மைதானத்தில் வைத்து நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்தனர். இங்கு வந்த அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நேற்று மாலையுடன் தனிமைப்படுத்துதலின் காலம் வீரர்களுக்கு முடிவுக்கு வந்துள்ளளது. இதனை தொடர்ந்து தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர் இந்தியா அணியினர். மேலும் இன்று முதல் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இந்த தொடர் மூலம் அணியில் மீண்டும் இணைய உள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துள்ளார் – காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்!!

தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படம் அனைத்தும் வைரலாகி வருகிறது. மேலும் தனது அணியின் சக வீரர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது இரு அணிகளுக்கும் இடையே வரும் 13ம் தேதி சென்னையில் வைத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here