நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துள்ளார் – காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்!!

0

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது வரை இவரது வழக்கில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை மரணம்

சின்னத்துரை நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் தான்,சித்ரா. இவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும், இவருக்கு மிகவும் பெயர் வாங்கி கொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற சீரியல் தான். இதில் அவர் ஏற்று நடித்திருந்த முல்லை கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்திருந்தது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – ஆளுநர் உரையை புறக்கணித்த எதிர்கட்சிகள்!!

இப்படியான சூழலில் இவர் கடந்த ஆண்டு தனியார் ஹோட்டல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறியதை அடுத்து புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

இவரை திருமணம் செய்ய இருந்த ஹேமந்த் என்பவர் இவரை துன்புறுத்தியதாகவும், அதிக மனஉளைச்சலுக்கு ஆளான காரணத்தால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் தகவல்

எனினும், இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை கொலை செய்து உள்ளனர் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து சித்ராவை திருமணம் செய்ய இருந்த ஹேமந்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இது ஒரு பக்கம் இருக்க நிபுணர் குழுவும் தங்களது அறிக்கையினை வழங்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது சின்னத்திரை நடிகை சித்ரா தானாகவே தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அதே போல் இவரது வழக்கு குறித்து 12 சாட்சிகளிடம் மறுவிசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here