தமிழகத்தில் தற்போது இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தற்போது தமிழகத்தில் வரும் மே மாதம் முதல் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேலை, கூட்டணி முடிவுகள் என தேர்தல் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர். ஆகையால் இதனை ஆளுநர் உரையுடன் துவக்கி முடிவெடுத்தனர். ஆனால் ஆளுநர் உரையை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர். அதன்பின்பு ஆளுநர் தனது உரையை துவக்கினார். தற்போது இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோ சூட் – ரசிகர்கள் உற்சாகம்!!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் அறையில் அலுவல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.