முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை செய்தவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழக அரசின் எதிர்பினையும் மீறி ஒரு வாரம் பரோல் காலத்தை நீடித்துள்ளது.
பிரதமர் சுட்டு கொலை:
பேரறிவாளன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, “கொலையாளிகளுக்கு பெல்ட் வெடிகுண்டில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இது வரை இது குறித்த எந்த ஒரு ஆதாரத்தையும் சிபிஐ வெளியிடவில்லை. இதனால் எனது ஆயுள் தண்டனையினை நிறுத்தி வைக்க வேண்டும்” இவ்வாறாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து ஏன் பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவினையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதே போல் இந்த வழக்கினை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைத்துள்ளனர். இந்த காலத்திற்கு நடுவில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தெரிவித்தது. அவரது பரோலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான பிரபு நேற்று பேரறிவாளனின் பரோல் காலம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் நிலவும் புயல் பாதிப்பு காரணமாகவும், அவரது மருத்துவ சிகிச்சை காரணமாகவும் அவருக்கு 90 நாட்கள் பரோல் நீடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை உச்சநீதிமன்ற நீதிபதியான நாகஸ்வர ராவ் கொண்ட அமர்வு விசாரித்தது. தற்போது தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி பேரறிவாளனுக்கு 1 வாரம் பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.