அழகை விருப்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அழகு வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் அழகை பெற முடியும். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.
கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சள் நறுமணம் மிகுந்தது. தினமும் கஸ்தூரி மஞ்சளை உடலுக்கு பயன்படுத்துவதால் தேவையில்லாத கிருமிகள் எதுவும் அண்டாது, உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். கருமையான முகத்தை வெள்ளையாக மாற்ற மஞ்சள் சிறந்த பொருளாக உதவுகிறது.
குப்பைமேணி:
குப்பையாக உள்ள மேனியை சரிசெய்ய குப்பைமேனி இலை பயப்படுகிறது. நமது கிராமங்களில் சுலபமாக கிடைக்கும் செடிகளில் ஓன்று குப்பைமேனி. இவற்றை பயன்படுத்துவதால் தோல் சம்பந்தமான நோய்கள் வராது. தேமல், அரிப்பு, படை, சொறி, சிரங்கு போன்ற நோய்கள் தீரும்.
பச்சை பயறு:
பச்சை பயறு வறட்சியான சருமத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்கும். சருமத்தில் சூடு போன்றவற்றால் ஏற்படக்கூடிய பருக்கள், கட்டிகள் போன்றவை வராமல் தடுக்கும். அதிக புரத சத்துக்கள் நிறைந்தது. சுற்றுசூழல்களில் மாசுபாட்டில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
பச்சை பால்:
பச்சைபால் முகம் மற்றும் சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ளும். எந்த ஒரு மாவை முகத்திற்கு பயன்படுத்தினாலும் அதில் பச்சை பாலை கலந்து பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக இருக்கும். குழந்தை போன்ற முகத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் முகத்தில் பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.
முகம் வெள்ளையாக மாற:
பால் – 10 மி.லி, கஸ்தூரி மஞ்சள்தூள் – 15கி, பச்சை பயறு மாவு – 25 கி, குப்பைமேனி இலை சாறு – 10மி.லி ஆகியவற்றை நன்றாக கலந்து, முகத்தை கழுவிவிட்டு 45 நிமிடம் போட வேண்டும்.
வாரத்திற்கு 4 முறை செய்தாலே போதுமானது. முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், மாசு, மங்கு, கருவளையம், அம்மை தழும்பு, குழிகள் போன்றவை நீங்கி முகம் பார்ப்பதற்கு தங்கம் போல் ஜொலிக்கும்.