இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல வித திருப்பங்கள் மற்றும் சந்தோஷமான செய்திகள் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ஹாஸ்பிடல் சென்று குழந்தை உள்ளதா? என்று டெஸ்ட் எடுக்கின்றனர்.
கூட்டு குடும்ப வாழ்க்கை:
நாம் மறந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கையினை அழகாக எடுத்து காட்டி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த நாடகத்தின் சிறப்பே இந்த நாடகத்தில் கூட்டு குடும்பத்தில் சந்தோசம் மட்டும் இருக்காது, சில நேரங்களில் சண்டையும், சில நேரங்களில் சச்சரவுகளும் இருக்கும் என்பதனை அழகாக எடுத்து காட்டினர். இதனாலேயே இந்த சீரியல் அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டது. இப்படியான நிலையில், இன்று ஒரு ப்ரோமோ ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே, தனம் வீட்டில் தான் கர்ப்பமாக உள்ளோமா? என்று டெஸ்ட் செய்து விட்டார். அதில் குழந்தை உள்ளது உறுதி தான் என்றாலும், ஹாஸ்பிடல் சென்று உறுதிபடுத்த விரும்புகிறார். முதலில், மூர்த்தியிடம் மட்டுமே குழந்தை உண்டான செய்தியினை சொல்லி மகிழ்கிறார். பின், இருவருமாக ஹாஸ்பிடல் செல்கின்றனர். அங்கு தனம் உச்சகட்ட பதட்டத்திலும், பயத்திலும் இருக்கிறார். மூர்த்தி அப்படி இருந்தாலும், தனத்திற்காக அதனை வெளிக்காட்டாமல் உள்ளார்.
டாக்டரின் பதில்:
நர்ஸ் வந்து அடுத்த நபரை அழைத்ததும் மூர்த்தி மற்றும் தனம் உள்ளே செல்கின்றனர். டாக்டர் எப்போது குழந்தை உண்டானதை பரிசோதித்தீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு தனம் ஒரு வாரத்திற்கு முன்பு என்று பதில் சொல்லி விட்டு அவர் கூறும் பதிலுக்காக இருவரும் காத்திருக்கின்றனர். டாக்டரும் மகிழ்ச்சியுடன் இது நல்ல செய்தி தான் என்று கூறுகிறார்.
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – அடுத்தடுத்து பலி, திருநெல்வேலியில் பயங்கரம்!!
இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இது மட்டும் அல்லாமல் டாக்டர் தனம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்று கொள்வதால் கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்திக்கிறார். இந்த ப்ரோமோவால் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.