தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – அடுத்தடுத்து பலி, திருநெல்வேலியில் பயங்கரம்!!

0

அண்ணன், தங்கை முறை கொண்ட இருவர் திருமணம் செய்துகொண்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் வேல் என்பவருக்கு சுடலைராஜ் மற்றும் இசக்கி முத்து என்று இரு மகன்கள் உள்ளனர். சுடலைராஜின் மனைவி உயிரிழந்துள்ளதால் அவரது அடுத்த வீட்டில் இருக்கும் சகோதரர் இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் இரண்டு பேரும் உணவு சமைத்து கொடுத்து உதவி செய்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில் சுடலை ராஜின் மூத்த மகன் காளிராஜ் மற்றும் இசக்கிமுத்துவின் மகள் மேகலா இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதை அறிந்த இரண்டு குடும்பத்தினரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதை விட்டுவிடுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் காளிராஜ் மற்றும் மேகலா இருவரும் வீட்டை விட்டு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் வெளியில் சென்று திருமணம் செய்து பாளையங்கோட்டையில் உள்ள ரஹ்மத் நகரில் குடி இருந்து உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு தனது பணியை முடித்து விட்டு 10 மணியளவில் வீடு திரும்புகையில் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார்.

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் டவலை வைத்து தைத்த மருத்துவர்கள்!!

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேகலாவை திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டாரா,அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காளிராஜைத் தொடர்ந்து மேகலாவும் கொலை செய்யப்படலாம் என்று போலீசாருக்கு கிடைத்த தகவலினால் மேகலாவை பாளையங்கோட்டையில் உள்ள மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை காப்பக பெண்க அனைவரும் சாப்பிட சென்ற போது மேகலா காப்பக அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காளிராஜ் மற்றும் மேகலா இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது அப்பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here