தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்க முதல்வர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த அனைத்து ஒப்பந்தங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தி, சூரிய மற்றும் காற்றாலை சக்தி போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பிற்கான திட்டங்கள்:
தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக தற்போது முதலமைச்சர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது 19,995 கோடி ரூபாய் முதலீட்டிலும், 26,500 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 27,324 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 4456 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
நிறுவனங்களின் ஒப்பந்தங்கள்:
- ola electric mobility நிறுவனம் – கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – 2,354 கோடி ரூபாய் முதலீடு – 2,182 பேருக்கு வேலைவாய்ப்பு – மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி திட்டம்
- Torrent gas chennai private limited நிறுவனம் – திருவள்ளூர் – 5000 கோடி ரூபாய் – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – நகர எரிவாயு விநியோகம்
- first solar நிறுவனம் – 4,185 கோடி ரூபாய் முதலீடு – 1,076 நபர்களுக்கு வேலை வாய்ப்பு – உற்பத்தி திட்டம்
- Society for smart electric mobility நிறுவனம் – 2,500 கோடி ரூபாய் முதலீடு – 1000 பேருக்கு வேலைவாய்ப்பு – மின்சார வாகனங்களுக்கான தொழிற்பூங்கா.
- Voltas நிறுவனம் – காஞ்சிபுரம் – 1001 கோடி ரூபாய் முதலீடு – 2000 பேருக்கு வேலைவாய்ப்பு – குளிர் சாதன பெட்டி தயாரிக்கும் பணி.
- Mylan laboratories நிறுவனம் – கிருஷ்ணகிரி – 350 கோடி ரூபாய் முதலீடு – 250 பேருக்கு வேலைவாய்ப்பு – மருந்து உற்பத்தி திட்டம்.
- Gurit india private limited நிறுவனம் – காஞ்சிபுரம் – 320 கோடி ரூபாய் முதலீடு – 300 பேருக்கு வேலைவாய்ப்பு – உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
- Yaclass நிறுவனம் – சென்னை – 300 கோடி ரூபாய் – 1000 பேருக்கு வேலைவாய்ப்பு
- KPR Sugar and apparels ltd நிறுவனம் – திருப்பூர் – 200 கோடி ரூபாய் முதலீடு – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜவுளி ஆலை உற்பத்தி திட்டம்.
- Magnus infrastructure நிறுவனம் – திருவள்ளுர் – 200 கோடி ரூபாய் முதலீடு – 150 பேருக்கு வேலைவாய்ப்பு – பொருளாதார மண்டலம்.
- stanadyne நிறுவனம் – 180 கோடி ரூபாய் முதலீடு – 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பம்ப் உற்பத்தி.
- Mahindra CIE நிறுவனம் – கிருஷ்ணகிரி – 50 கோடி ரூபாய் முதலீடு – 220 பேருக்கு வேலைவாய்ப்பு.
இது போன்ற இன்னும் சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.