முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து வீட்டில் தொடர்ந்து பல பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனா தினமும் முல்லைக்கு கால் செய்து புலம்ப அவருக்கு தனம் மீது கோவம் வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முந்தைய எபிசோடில் முல்லை, மீனாவை பார்க்க சென்றார். மீனாவை முல்லை வீட்டிற்கு அழைக்க ஜீவா வரும் வரை அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறினார். முல்லைக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேலும் நேற்று முழுக்க முல்லை மற்றும் கதிரையே காட்டினர். முல்லைக்கு தனத்தின் நடவடிக்கையிலும் அடிக்கடி சந்தேகம் ஏற்பட தான் செய்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வெளியில் இருக்கும் கடையில் தனமும், கண்ணனும் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். அப்பொழுது ஒரு பெண் தெரு முக்கில் கடை வைத்திருக்கும் எண்ணெய் கடைக்காரர் இறந்து விட்டதாக சொல்கிறார். மேலும் அவருக்கு படிக்கும் வயதில் குழந்தை இருப்பதாகவும் சொல்கிறார்.

இதற்கு தான் காலகாலத்துல எல்லாம் நடந்துறணும்னு சொல்றது என்று வேறு சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் தனத்திற்கு என்னவோ போல ஆகிறது. கண்ணனிடம் 35 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாதா என கேட்க கண்ணன் அதெல்லாம் தப்பில்லை என்று கூறுகிறார். சினிமாவில் நடிகைகள் 35 வயதில் தான் திருமணமே செய்து கொள்கின்றனர்.

பாரதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் வேணு!!

வெளிநாட்டில் எல்லாம் இது சகஜம் என்றும் கூறுகிறார். இதனால் தனம் நிம்மதியடைகிறார். அடுத்து ஜீவாவை காட்ட குழந்தையின் தொட்டிலை பார்த்து ஏக்கமாக அழுகிறார். மீனாவிற்கு கால் செய்ய வழக்கம் போல அதே அர்ச்சனை தான். குழந்தை பிறந்ததில் இருந்து எங்களுக்கு நீ என்ன பண்ணிட்ட என்று கேட்க ஜீவாவிற்கு கஷ்டமாகிறது.

மீனாவும் போனை வைத்து விடுகிறார். இதனால் ஜீவாவிற்கு கோவம் வருகிறது. மீனா இப்படின்னா அண்ணன், அண்ணி அதுக்கு மேல இருக்காங்க என்று கோவப்படுகிறார். அடுத்ததாக முல்லைக்கு மீனா கால் செய்து குழந்தை அழுதுகொண்டே இருப்பதாக சொல்ல முல்லைக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று தெரியாமல் உள்ளார்.

கதிர் வந்தவுடன் நடந்ததை சொல்ல கதிர் மறுபடியும் அண்ணன், அண்ணிக்கு சப்போர்ட் செய்கிறார். இதனால் கடுப்பாகும் முல்லை நான் மீனா பக்கம் தான் என்னைக்குமே என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த பக்கம் தனம் வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here