பாரதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் வேணு – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் சிகிச்சை பார்க்க எப்படியோ லட்சமி, கண்ணம்மாவை சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வருகிறார். இந்நிலையில் கண்ணம்மாவும், பாரதியும் சந்தித்து கொள்வார்களா?? சந்தித்தால் என்ன நடக்கும் என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா சென்னைக்கு வருவதற்கு மறுக்க லட்சுமி சாப்பிடாமல் இருந்து எப்படியோ சம்மதிக்க வைத்தார். சென்னைக்கு கிளம்பும் கண்ணம்மா வரும் வழியில் பாரதியை பார்த்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லட்சுமி ஹாஸ்பிடலில் பாரதியை பற்றி விசாரித்துக் கொண்டு உள்ளார். என்ன நடக்கப் போகிறதோ என்று கண்ணம்மா பதட்டத்தில் வேறு இருந்தார். அடுத்ததாக கண்ணம்மாவும் லட்சுமியும் துளசி வீட்டிற்கு செல்கின்றனர். லட்சுமி இது யாருடைய வீடு என்று கேட்க தன் தங்கச்சி வீடு என்று சொல்கிறார். துளசியை வெளியில் இருந்து கூப்பிட கண்ணம்மாவை பார்த்ததும் சந்தோஷமடைகிறார்.

மேலும் லட்சுமியும் துளசி சித்தி என்று அடையாளம் கண்டுபிடிக்க துளசிக்கு ஆச்சர்யமாக உள்ளது. குழந்தையாக இருக்கும் போது உங்க அம்மா உன்னை தூக்கி கொண்டு போய் விட்டார் என்று சொல்கிறார். கண்ணம்மா வேறு இடத்தில் தங்க போவதாக சொல்ல துளசி இங்கு தான் தங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். துளசிக்கு கல்யாணம் நடந்தாயிற்று. அவரின் கணவரும் துபாயில் இருப்பதாகவும் கூறினார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கலாம்!!

அடுத்ததாக சௌந்தர்யாவின் வீட்டை காட்டுகின்றனர். சௌந்தர்யாவின் வீட்டிற்கு வரும் தோழிகள் பாரதிக்கும், வெண்பாவிற்கு கல்யாணம் நடந்து விட்டதா?? என்று கேட்க சௌந்தர்யாவிற்கு கோவம் வருகிறது. எதை வைத்து இப்படி நினைக்கிறீங்க என்று கேட்க இரண்டு பெரும் எப்போ பாத்தாலும் ஒண்ணா சுத்துறாங்களே அதான் என்று சொல்ல சௌந்தர்யா அவர்களை திட்டு விடுகிறார்.

ஏற்கனவே அகிலன் வெண்பாவையும், பாரதியையும் ஒன்றாக இருக்க விட கூடாது என்று சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. இந்நிலையில் பாரதியும், ஹேமாவும் பைக்கில் சென்று கொண்டுள்ளனர். கடையில் பெட் சீட் எல்லாம் வாங்கி ரோட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே கண்ணம்மாவும் இப்படி தான் செய்தார்.

அது பாரதிக்கு நினைவுக்கு வருகிறது. ஹேமாவும் அப்படியே செய்வதை பார்த்து ஆச்சரியப்படுகிறார் பாரதி. இதனை தொலைவில் இருந்து துர்காவும் பார்த்துக் கொண்டுள்ளார். இந்த சமயத்தில் சௌந்தர்யா வீட்டில் வேணு பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here