கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரின் மேல் செல்லக்கூடிய இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
கொரோனா பொது முடக்க காலம்:
கொரோன நோய் பரவல் காரணமாக பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் மூலமாக பலரது திறமைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே போல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் தண்ணீரின் மேல் செல்லக்கூடிய வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அவரது பெயர் தட்சிணாமூர்த்தி. இவர் மேட்டூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி வந்து உள்ளார்.
புதிய கண்டுபிடிப்பு:
இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் வீட்டில் இருந்து கொண்டு தண்ணீரின் மேல் செல்லக்கூடிய வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். அந்த வாகனம் 100 சி.சி திறன் கொண்ட வாகனம். வாகனத்தின் இருபுறமும் லாரி டிப்புகளை பொருத்தி தேநீரின் மேல் இயங்கும் வகையில் கண்டுபிடித்துள்ளார். இந்த வாகனத்தை அவர் ஓட்டியும் காட்டியுள்ளார்.
கூகிள் பிளே ஸ்டோரில் நீக்கப்படாத பப்ஜி!!
இது குறித்து அவர் கூறுகையில் “இந்த வாகனம் தண்ணீரில் செல்ல கூடிய வகையில் உருவாக்கியுள்ளேன். இது போல் நிறைய கண்டுபிடிப்புகளை செய்ய ஆர்வமாக உள்ளேன். அரசாங்கம் ஊக்குவித்தல் இன்னும் நிறை கண்டுப்பிடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.