பப்ஜி தடை செய்த பின்னரும் மொபைல்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் கூகிள் பிளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்படவில்லை.
பப்ஜி
இந்தியாவில் பப்ஜி விளையாட்டை 20 லட்சத்திற்கு மேலான பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கேம் பிரியர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. இந்தியாவில் அதிகபட்ச இளைஞர்கள் பப்ஜி கேம் தான் விளையாடிக்கொண்டுள்ளனர். இந்த கேம்மால் பல விபரீதங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளன.
எனவே தான் மத்திய தொழில்துறை அமைச்சகம் பொதுநலம் கருதியும், பாதுகாப்பை முன்னிட்டும் பப்ஜி உள்ளிட்ட 114 மொபைல் செயலியை தடை செய்தது. ஆனால் தடை செய்து ஒரு நாள் ஆகியும் கூகிள் பிளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து, 69ஏ சட்டத்தின் படி பப்ஜி தடை அமல்படுத்தப்படும். விரைவில் கூகிள் பிளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் என விளக்கமளித்துள்ளது.