இறந்தவர்களின் பட்டியலை பார்த்து அவர்கள் அனைவரும் கொரோனாவால் தான் இறந்துள்ளனர் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம், என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா இறப்பு விகிதம்:
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாக கூடியுள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகமாக தான் காணப்படுகிறது.
தொலைக்காட்சி பெட்டி மேலே விழுந்து குழந்தை பலி – பெற்றோர் அலட்சியத்தால் விழைந்த சோகம்!!
கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 முதல் 10 வரை என்றும், இறந்துபோவோர் எண்ணிக்கை 100 முதல் 150 வரை பதிவாகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
விஜயபாஸ்கர் பேட்டி:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியதாவது “இந்தியா மருத்துவ மையத்தின் ஆராய்ச்சி தந்துள்ள நெறிமுறைகளின்படி தான் கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கபடுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால், அனைத்து உயிரிழப்புகளுக்கும் காரணம் கொரோனா தான் என்று மக்கள் அச்சப்பட வேண்டாம். 10 சதவீத நோயாளிகள் தான் உயிரிழக்கின்றனர். அதனால், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கபட்டு குணமானவர்கள் மீண்டும் கொரோனவால் பாதிக்கப்படுவது குறைவு தான்.” என்று தெரிவித்துள்ளார்.