Wednesday, May 15, 2024

தொலைக்காட்சி பெட்டி மேலே விழுந்து குழந்தை பலி – பெற்றோர் அலட்சியத்தால் விழைந்த சோகம்!!

Must Read

உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி 3 வயது சிறுவன் மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அலட்சியத்தால் விபரீதம்:

தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் அகரம்தென் அன்னை சத்யா நகர் குடியிருப்பை சேர்ந்தவர், பாலாஜி. இவருக்கு மூன்று வயதில் கவியரசு என்று ஒரு மகன் இருந்துள்ளான். இவர் தனது குதுன்பத்துடன் வசித்துவந்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இவர்களது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டியை கட்டைகளின் மீது வைத்துள்ளதாக அப்பகுதியினர் சொல்கின்றனர். அதுவும் பாதுகாப்பற்ற முறையில் இருந்துள்ளது. மேலும், அந்த தொலைக்காட்சின் மேல் தான் பாலாஜி தனது மொபைலை சார்ஜ் போடுவது வழக்கமாம்.

குழந்தை மீது விழுந்துள்ளது:

இப்படி இருக்க நேற்று இரவு பாலாஜி ஒரு 7 மணி அளவில் வேலை முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். அவரது மனைவி வெளியில் நின்றுள்ளார். அப்போது அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதனை பாலாஜி கவனிக்கவில்லை.

சாமியானா பந்தல், மைக் செட் – சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க விதிகள் வெளியீடு!!

child tries to take the phone
child tries to take the phone

ஆனால், அவரது மகன் கவியரசு ஓடி வந்து தொலைபேசியை எடுத்துள்ளான். அப்போது பாதுகாப்பற்ற முறையில் இருந்த கட்டைகள் விழுந்து தொலைக்காட்சி அந்த குழந்தை மீது விழுந்துள்ளது. இதனால், குழந்தை அந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளான் . அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது குழந்தை மரணம் அடைந்துள்ளது.

போலீசார் விசாரணை:

தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இது போல் பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறினர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -