மதுரையின் திலகர் திடல் பகுதியில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கைக்கு காவல் ஆய்வாளர் கவிதா உதவி செய்துள்ளார். மேலும் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.
திலகர் திடல்
மதுரை மாநகரில் உள்ள திலகர் திடல் பகுதியில் திருநங்கை ஒருவர் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாக தெரிய வருகிறது. இதனை கண்காணித்த காவல் ஆய்வாளர் கவிதா அவரிடம் விசாரித்தபோது, தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதாக கூறியுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆகையால் காவல் ஆய்வாளர் கவிதா, திருநங்கையை பற்றி விசாரித்தபோது அவர் உண்மையாகவே மருத்துவ படிப்பை படித்திருப்பது அவரது சான்றிதழ் மூலம் தெரியவந்தது.
காவல் ஆய்வாளர் உதவி
திருநங்கை உண்மையாகவே மருத்துவ படிப்பை முடித்து விட்டு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிய வந்தது. பின்பு இதனை விசாரித்த காவல் ஆய்வாளர் கவிதா திருநங்கைக்கு மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கு அனைத்து செலவுகளையும் தனது சொந்த செலவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தமிழக காவல்துறை சார்பில் திருநங்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதனை காவல் ஆய்வாளர் கவிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.